சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். அவரது உறவினர்கள் பலரும் சினிமாவில் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஐதராபாத்தில் பெரிய தொழில் நிறுவனங்களும், சினிமா ஸ்டூடியோக்களும் உள்ளன. எனவே திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவிடம் உங்கள் திருமணத்தை எப்படி நடத்தப்போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து சமந்தா கூறியதாவது:-
“பிறந்த நாள் மற்றும் திருமண விழா ஆகிய இரண்டையும் விட சிறப்பானது எதுவும் இல்லை. எல்லோருமே இந்த விழாக்களை விமரிசையாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடவே விரும்புவார்கள். ஆனால் எனக்கு பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாக கொண்டாடும் அளவுக்கு நாம் என்ன சாதித்து விட்டோம் என்று நினைத்துக்கொள்வேன்.